லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் அர்ஜுன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தோம்.
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.
முன்னதாக, விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்தில் த்ரிஷா தான் நாயகி என்று ஒரு தரப்பும், ராஷ்மிகா தான் நாயகி என்று இன்னொரு தரப்பும் தகவலைப் பரப்பியது. இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது அதில் உண்மையில்லை என்று பதில் வந்தது.
இந்நிலையில் 'தளபதி 64'-ல் அர்ஜுன் வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. இதன் உண்மைத் தன்மையை அறியும் நோக்கத்தில் விசாரித்த போது, ''இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'கைதி' படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் முதல் பிரதி எடுத்து தயாரிப்பாளர் கையில் கொடுத்தவுடன் தான் தளபதி 64 பணிகளையே தொடங்குவார். அதற்குள் ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா நாயகி, வில்லனாக அர்ஜுன் என்று உலவும் செய்திகள் எதிலும் உண்மையில்லை'' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
விளையாட்டு
45 mins ago
தமிழகம்
14 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago