ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் செளகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
'பாபநாசம்' படத்தைத் தொடர்ந்து, கார்த்தி - சத்யராஜ் - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இதன் படப்பிடிப்பு ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தி வருகிறார்கள்.
இதில் 'சூப்பர் டீலக்ஸ்' ராசுக்குட்டி, அன்சன் பால், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க செளகார் ஜானகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு 'வானவராயன் வல்லவராயன்' படத்துக்குப் பிறகு தமிழில் செளகார் ஜானகி நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை அக்டோபரில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் கார்த்தி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago