திரைப்பட தொழிலாளர்கள் சம்பளம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை இழுபறி

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளாததால் பெப்சி தொழி லாளர்கள் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை வருகிற 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) இடையே ஊதிய உயர்வு, பொது விதிகள் அமல்படுத்துவது தொடர்பான சிக்கலால் சமீபத்தில் திரைப்பட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரச்சினைக்கு சுமுக முடிவு எட்டும் விதமாக 3 நாட்கள் படப்பிடிப்புக்கு கிளம்பினர்.

இதனை அடுத்து தொழிலாளர் நல ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 4-ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சரியான முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 11-ம் தேதி (நேற்று) நடப்பதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் வெளியூர் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் இருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: தொழிலாளர்கள் நல ஆணையம் தெரிவித்ததன் அடிப்படையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சென்றோம். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஊரில் இல்லாததால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 17-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனால் பெப்சி, தயாரிப் பாளர்கள் சங்கம் இடையே நிலவும் சம்பளப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்