சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பலூன்', செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பலூன்'. மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இப்படத்தின் வெளியீட்டு உரிமை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியது.
செப்டம்பர் 27-ம் தேதி 'பலூன்' வெளியாகும் என ஆரோ சினிமாஸ் அறிவித்துள்ளது. இது குறித்து 'ஆரோ சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜன், "'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27-ம் தேதி 'பலூன்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே பேராதரவு தந்துள்ளனர். நல்ல கதையையும் அதற்கு சரியாக அங்கீகாரத்தை தரும் ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் 'பலூன்' " என்று தெரிவித்துள்ளார்.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன்' படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள், டீஸர்கள் ஆகியவை சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago