மீண்டும் விஜய்யுடன் கூட்டணி: உறுதி செய்த ஏ.ஆர்.முருகதாஸ்

By ஸ்கிரீனன்

மகேஷ்பாபு படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையவிருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய படங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'கத்தி' படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

இப்படம் குறித்து லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் "இப்படம் தற்போது மிகவும் தொடக்கநிலையில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விசாரித்த போது, "மகேஷ்பாபு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், அப்படம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள் யாவும் உண்மையில்லை. கதை முடிவானவுடன் தான், மீதமுள்ள அனைத்துமே முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்கள்.

மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும், விஜய் படத்தை உறுதி செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்