கபாலியைத் தொடர்ந்து சூர்யா படம்: இயக்குநர் ரஞ்சித் தகவல்

By ஸ்கிரீனன்

'கபாலி' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் 'கபாலி' படத்தின் தமிழ் பதிப்பின் இசை இணையத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 26) தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். அந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரஞ்சித், "'கபாலி' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

சூர்யா - ரஞ்சித் படம் குறித்து விசாரித்தபோது, "'கபாலி' படத்துக்கு முன்பே, சூர்யாவைத் தான் இயக்கவிருந்தார் ரஞ்சித். அப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இதனிடையே ரஜினி படம் ஒப்பந்தமான உடன், அனைவரிடம் பேசிவிட்டு தான் 'கபாலி'யை இயக்கச் சென்றார்.

சூர்யா படத்துக்கான கதை மற்றும் திரைக்கதை உள்ளிட்ட பணிகளை முடித்து வைத்திருக்கிறார் ரஞ்சித். 'சிங்கம் 3' பணிகளை முடித்து சூர்யா திரும்பியவுடன், இப்படம் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

20 mins ago

விளையாட்டு

43 mins ago

வணிகம்

55 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்