ஜல்லிக்கட்டுக்கு எதிராக ராம் கோபால் வர்மாவின் ட்வீட்களுக்கு, தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் பதிலடி கொடுத்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று மெரினாவில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பவர் ராம் கோபால் வர்மா, ரஜினி, பவன் கல்யாண், சீரஞ்சிவி உள்ளிட்டவர்களைப் பற்றி ஏற்கனவே கருத்துக்களைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் இப்போராட்டம் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். தனது கருத்தில், "விலங்குகள் மீது மிருகத்தனமான தாக்குதல் சரி என்றால், அல்கைதா தீவிரவாதிகள் மனிதர்கள் மீது நடத்துவதும் சரி தான். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் மிருகங்கள் வதைக்கப்படுவது தீவரவாதத்தை விட கொடுமையானது.
பிரபலங்கள் இதை ஆதரிப்பது வெறும் ஒட்டுக்களுக்காகவும், டிக்கெட்டுகளுக்காகவும் தான். மிருகங்களை யார் தான் ஆதரிப்பது. மிருகங்களுக்கும் ஒட்டு மற்றும் டிக்கெட்கள் இருந்தால் எந்த ஒரு பிரபலமும் இதை ஆதரிக்க மாட்டார்கள்" என பல்வேறு கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ராம் கோபால் வர்மா.
இக்கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இக்கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் இருக்கும் தமிழ் திரையுலக பிரபலங்களான இயக்குநர் வெங்கட்பிரபு, ராம், ஜெய் உள்ளிட்ட பலரும் ராம் கோபால் வர்மாவை கடுமையாக சாடினர்.
மேலும், தமிழ்நாட்டு மக்களிடையே ராம் கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 mins ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
ஆன்மிகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago