மறுபடியும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டாம் என்று மாணவர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக லாரன்ஸ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் லாரன்ஸ் பேசியிருப்பது:
"ஆளுநர் நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது என அனைத்து மீடியாக்களிலும் சொல்லி வருகிறார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காலையில் மிகவும் சோர்வாக இருந்தேன். இப்போது நமக்கு நிஜமான வெற்றி கிடைத்துவிட்டது. இது யாருக்குமே புரியவில்லை. மறுபடியும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டாம்.
மெரினா கடற்கரையில் யாருமே உட்கார வேண்டாம், இந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாட வேண்டிய ஒரு நாள். எந்த இடத்தில் தூக்கமின்றி 7 நாட்கள் கஷ்டப்பட்டோமோ அந்த இடத்தில் இன்று நாம் கொண்டாட வேண்டும். ஆடிப்பாடி கொண்டாட வேண்டும். கடலுக்குள் செல்வதோ, சாலையில் அமர்வதோ உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தை தயவு செய்து செய்யாதீர்கள்.
எங்களுடைய உணர்வுகளைப் புரிந்து, உறுதுணை புரிந்த பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களே, நாம் பட்ட கஷ்டத்தை இன்றிரவு சந்தோஷமாக கொண்டாடலாம். நமக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வெற்றி" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
32 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
12 hours ago