வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'வடசென்னை'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வந்தார்கள்.
கடந்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால், 'வடசென்னை' முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வேலையில்லா பட்டதாரி 2', 'ப.பாண்டி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் தனுஷ். இதனால் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று கேள்வி எழுந்தது.
'ப.பாண்டி' வெளியாகவுள்ள நிலையில் தனுஷ், "பவர் பாண்டி இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், வட்சென்னை படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியது. சுட்டெரிக்கும் சூரியன், கடல், பெரிய மனிதர்கள் அப்புறம் வெற்றிமாறனுக்கே உரித்தான படப்பிடிப்பு தளங்கள் என படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago