அருண் விஜய் - மகிழ்திருமேனி இணையும் தடம்: ஜூன் 19-ல் படப்பிடிப்பு தொடக்கம்

By ஸ்கிரீனன்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படத்துக்கு 'தடம்' என பெயரிட்டுள்ளார்கள். ஜூன் 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அருண்விஜய். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'தடம்' என பெயரிட்டுள்ளார்கள். 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜூன் 19-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார் அருண்விஜய். பெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

படப்பிடிப்புக்குப் போவதற்கு முன்பாக, அருண்விஜய்யோடு நடிக்கவிருப்பவர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்