மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் படத்துக்கு 'தடம்' என பெயரிட்டுள்ளார்கள். ஜூன் 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அருண்விஜய். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'தடம்' என பெயரிட்டுள்ளார்கள். 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜூன் 19-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார் அருண்விஜய். பெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
படப்பிடிப்புக்குப் போவதற்கு முன்பாக, அருண்விஜய்யோடு நடிக்கவிருப்பவர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago