‘தல 60’ படத்தில் நான் நடிக்கவில்லை: எஸ்.ஜே.சூர்யா மறுப்பு

By செய்திப்பிரிவு

அஜித்தின் அடுத்த படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

அஜித் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் பற்றி அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் 60-வது இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார். இது எச்.வினோத்தின் நேரடிக் கதையாகும்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார்.

“அன்பார்ந்தவர்களே... ‘தல 60’ படத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அஜித் மற்றும் போனி கபூர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. தயவுசெய்து பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

சமூக ஆர்வலர்கள் பற்றி உருவாகிவரும் இந்தப் படத்தை, அடுத்த ஆண்டு (2020) புத்தாண்டு விடுமுறையில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்