ஏ.ஆர்.ரஹ்மானின் ட்விட்டர் ‘பயோ’வில், அட்மின் தான் ட்வீட் செய்கிறார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தன் இசை மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது, கிராமி விருது என ஏகப்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். பாடல்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி, ஒரு படத்தையும் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். முக்கியமான விஷயங்களைப் பற்றி அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார்.
குறிப்பாக, தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் எனக் கொண்டு வரப்பட்ட மும்மொழித் திட்ட வரைவு அறிக்கை சமீபத்தில் ட்ரெண்டானது. அந்த சமயத்தில், ‘மரியான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்னும் கொஞ்ச நேரம்’ பாடலை பஞ்சாபி ஒருவர் பாடிய கவர் வீடியோவை வெளியிட்டு, ‘பஞ்சாபிலும் தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது’ என்று ட்வீட் செய்தார்.
பின்னர், ‘இந்தி கட்டாயமில்லை’ என வரைவு அறிக்கை திருத்தப்பட்டபோது, அதைக் குறிப்பிட்டு, ‘அழகிய தீர்வு’ என ட்வீட் செய்தார். மேலும், ‘Autonomous’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு, கேம்பிரிட்ஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை, அதற்கான சுட்டியுடன் பகிர்ந்தார். அவரின் இந்த ட்வீட்டுகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
இந்நிலையில், திடீரென நேற்று (ஜூன் 4) இரவு தன்னுடைய ட்விட்டர் கணக்கின் ‘பயோ’வில், ‘அட்மின் தான் ட்வீட் செய்கிறார்’ என மாற்றம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுகுறித்து பலரும் காலையில் இருந்து ட்வீட் செய்ய, தற்போது அதை நீக்கிவிட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
சினிமா
49 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
14 hours ago