அடுத்து இயக்கப்போவது அறம் பார்ட் 2 இல்லை: இயக்குநர் கோபி நயினார்

By செய்திப்பிரிவு

‘அடுத்ததாக ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை’ என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸாகி எல்லோராலும் கொண்டாடப்பட்ட படம் ‘அறம்’. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. அதற்குள் ஏகப்பட்ட சமூகக் கருத்துகளைச் சொல்லியிருப்பார் கோபி நயினார்.

எனவே, அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்புக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் அவர் இயக்கப் போகிறார் என்றும், அதிலும் நயன்தாராவே நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் அதை மறுத்துள்ளார்.

“என்னுடைய அடுத்த படம் பற்றி தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது. நிச்சயமாக அடுத்து ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை. ஆனால், ‘அறம்’ போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தைத்தான் இயக்க இருக்கிறேன். ‘அறம்’ படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியது. எனவே, அதற்கான பொறுப்புடன் அடுத்த படத்தின் கதையைத் தயார்செய்து வருகிறேன். அது முடிந்த பிறகுதான் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து முடிவெடுப்பேன்” என்கிறார் கோபி நயினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்