வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள ‘கசட தபற’

By செய்திப்பிரிவு

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கசட தபற’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன். 6 கதைகள், 6 ஹீரோக்கள் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. ‘தமிழ்ப்படம்’ சிவா, ஜெய், வைபவ், பிரேம்ஜி என வெங்கட்பிரபு டீம் தான் இந்தப் படத்தில் நடித்துள்ளது.

ஒரு கதையில் நடிப்பதோடு, இன்னொரு கதைக்கு இசையும் அமைத்துள்ளார் பிரேம்ஜி. ‘பிக் பாஸ் 2’ விஜயலட்சுமியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதை அவர் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ‘கசட தபற’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக்கை இன்று (மே 20) ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா.

இந்தப் படத்தில் 6 எடிட்டர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்கள் யார் யார் என நாளை அறிவிக்க இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் 6 எடிட்டர்களையும் அறிவிக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்துவந்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. பிரச்சினை முடிந்து, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிம்புதேவன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்