'சர்கார்' படத்தின் வீடியோக்களை வெளியிட்டு, வாக்காளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 16) மாலையுடன் முடிவுற்றது. நாளை (ஏப்ரல் 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு திரையுலக பிரபலங்களும், கண்டிப்பாக வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
'சர்கார்' படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைத்திருப்பார். இதில் கூறப்பட்ட 49-ஓ என்ற சட்டத்தை தற்போது தேர்தல் ஆணையம் கையிலெடுத்து தங்களுடைய விளம்பரங்களில் குறிப்பிட்டு வருகிறது.
மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தனது ட்விட்டர் பதிவில், "100% ஓட்டு அளிப்போம்..!" என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ”ஓட்டு உனது உரிமை..” என்று பதிவிட்டு 'சர்கார்' படத்தில் ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம் என்று விஜய் பேசும் வசனக் காட்சியை வெளியிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி 'சர்கார்' படத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வைத்து விஜய் பேசும் வசனங்கள் அனைத்துமே சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி இயக்கும் 'தர்பார்' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மும்பையில் இதன் படப்பிடிப்புக்கு நாளை (ஏப்ரல் 18) விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் வாக்களிக்க சென்னை திரும்பவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
36 mins ago
வணிகம்
51 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago