பொன்னியின் செல்வன் அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்துக்கு மோகன் பாபுவிடம் பேச்சுவார்த்தை

By ஸ்கிரீனன்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்'  படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு மோகன் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் முதற்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதர கதாபாத்திரங்களில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்.

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் பாபுவிடம், 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மணிரத்னம். விரைவில் இப்பேச்சுவார்த்தை முடிவுற்று ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

மேலும் கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களிடமும் மணிரத்னம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படம் தொடர்பான முறையான அறிவிப்பு வெளிவர இன்னும் சில காலம் எனத் தெரிகிறது. ’2.0’ படத்தைத் தொடர்ந்து,  இப்படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

36 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

34 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்