அஜித் நடித்துவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது.
ஆகஸ்ட் 10-ம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படம், கடந்த பொங்கல் விடுமுறையில் ரிலீஸானது.
ஒரே வருடத்தில் இரண்டு அஜித் படங்கள் ரிலீஸாவதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago