ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தேவ்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு 'கைதி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி. இதில் பாக்கியராஜ் கண்ணன் படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கப்பட்டாலும், முதலில் வெளிவருவது ஜீத்து ஜோசப் இயக்கும் படமாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.
இப்படத்தில் முதன்முறையாக கார்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஜோதிகா. கார்த்திக்கு இணையான மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், கார்த்திக்கு நாயகியாக நடிக்கவுள்ளவர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
ஜீத்து ஜோசப் படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை இறுதிச் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் 'இயக்கிய ’த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் இயக்கும் 2-வது படமாக கார்த்தி படம் அமைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago