மன அழுத்தத்தின் போது விஜய் கொடுத்த ஊக்கம்: அருண் விஜய் நெகிழ்ச்சி

By ஸ்கிரீனன்

மன அழுத்தத்தின் போது விஜய் கொடுத்த ஊக்கம் தொடர்பாக அருண் விஜய் அளித்த பேட்டியொன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'தடம்' படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

'தடம்' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில், தனக்கு மன அழுத்தத்தின் போது விஜய் எந்தளவுக்கு ஊக்கமளித்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'ஜனனம்' படத் தோல்வியினால் மன அழுத்தத்துக்கு ஆளானேன். படம் தாமதமாக வெளியானது. எங்கள் முயற்சிக்கு உரிதான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன்.

எனக்கு நெருங்கியவர்கள் சிலர் படத் தயாரிப்பில் இறங்கச் சொன்னார்கள். அப்போது இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருந்த விஜய் அவர்களை அணுகச் சொன்னார்கள். இந்த யோசனையை நான் விஜய் அவர்களிடம் சொன்னபோது, அவர் அதை விட்டுவிட்டு நடிப்பைத் தொடரச் சொன்னார்.

'நீ ஒரு நல்ல நடிகன், சிறப்பாக நடனமாடுபவன், என்னைவிட சிறப்பாக சண்டை போடுபவன்' என அவர் என்னை ஊக்கப்படுத்தினார். அந்த நேரத்தில் அவரது வார்த்தைகள் என்னை ஊக்குவித்து எனக்கு ஒரு தெளிவைத் தந்தது. இதற்காக என்றும் நான் அவருக்கு நன்றியுடன் இருப்பேன்.

இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

விளையாட்டு

58 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

மேலும்