பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் அடுத்த படத்துக்கான கதையைத் தயார் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
ஆனால், பொன்ராம் படத்துக்காக விஜய் சேதுபதி 2020-ம் ஆண்டில் தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டாம் என்று, புதிதாகக் கதையொன்றை தயார் செய்துள்ளார் பொன்ராம்.
அக்கதையை சசிகுமார் மற்றும் ராஜ்கிரணிடம் தெரிவிக்கவே, இருவருமே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். தற்போது படத்தின் பட்ஜெட்டை இறுதி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார் பொன்ராம். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும்.
சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கென்னடி கிளப்', 'கொம்பு வைச்ச சிங்கம்டா' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. அதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் படம் வெளிவரும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
11 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
இந்தியா
11 hours ago