இயக்குநர் டீகே, ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையே, விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகி நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
‘‘படம் இயக்குவதைவிட நடிப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜியும் நானும் ஏற்கெனவே நண்பர்கள். அவர் கூறியதால், அவரது ‘சீதக்காதி’ படத்திலும் நடித்தேன். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் இல்லை. இயக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். பாலாஜி போன்ற நண்பர்கள் அமைந்தால் அவ்வப்போது நடிப்பேன்.
என் முந்தைய 2 படங்களைவிட ‘காட்டேரி’யில்தான் நான் நினைத்ததுபோல படமாக்க முடிந்தது. வழக்கமான திகில் படமாக இல்லாமல், ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான அம்சமும் இதில் உள்ளது. வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago