நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3,000-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், நாடக நடிகர்களுக்கு தீபாவளிப் பரி சாக வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர்கள், நாடக நடிகர்கள் என மொத்தமாக 3,000-க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளிப் பரிசாக வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் இதை வழங் கினர். இதில் ராஜேஷ், மனோ பாலா, மன், உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டு, தீபாவளிப் பரிசை பெற்றுக்கொண்டனர். வெளியூர்களில் இருப்பவர் களுக்கு அந்தந்த ஊர்களில் உள்ள நடிகர் சங்க பிரதிநிதிகள் மூலம் வேட்டி, சேலைகள் விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், நடிகர் சங்க உறுப் பினர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஒய்வூதியமும் தீபா வளியை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதியே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
51 secs ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago