எனக்கும் என் மனைவி ரஜினிக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துவிட்டது என நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
2011-ல் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள். இன்று (நவம்பர் 13) இருவருக்குமே சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விஷ்ணு விஷால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறிய அறிக்கை ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நானும் ரஜினியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது சட்டபூர்வமாக விவாகரத்து கிட்டியுள்ளது. எங்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தைக்கு நல்ல பெற்றோர் ஆக இருப்பதே எங்களின் முக்கிய பொறுப்பு.
அவனுக்கு சிறந்ததை நல்குவோம். நாங்கள் சில அற்புதமான ஆண்டுகளை சேர்ந்தே கழித்துள்ளோம். இனியும் நல்ல நண்பர்களாக வாழ்வோம். ஒருவொருக்கொருவர் நன் மதிப்பை தருவோம். எங்கள் குழந்தை மற்றும் எங்கள் குடும்பங்களின் நலன் கருதி எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை மதிக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago