நான் தளபதி வெறியை: வரலட்சுமி சரத்குமார் குதூகலம்

By செய்திப்பிரிவு

நான் தளபதி வெறியை என்று ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் வரலட்சுமி சரத்குமார் பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில் வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ''ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு. முன்பு அப்படி ஒரு வாய்ப்பு வந்து நிறைவேறவில்லை. இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, முருகதாஸ் இயக்கம், ரஹ்மான் இசை, விஜய்யுடன் நடிப்பு என என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது.

நான் தளபதி வெறியை. தியேட்டரில் விஜய்யைப் பற்றி தப்பாகப் பேசிய ரசிகர்களிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். அதை விஜய்யே பார்த்திருக்கிறார்.

அமைதியாக இருக்கும் விஜய்யை, ஏ.ஆர்.முருகதாஸை நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேச வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு நான் உற்சாகத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்'' என்றார் வரலட்சுமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்