‘சர்கார்’ படத்துக்காக சிறப்பு வாட்ஸ் அப் ஸ்டிக்கர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘சர்கார்’ வெளியாகிறது.
இப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தேனாண்டாள் நிறுவனத்திடம் இருந்து சேலம் உரிமையை 7ஜி சிவா, கோயம்புத்தூர் உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ், திருச்சி - தஞ்சாவூர் உரிமையை எல்.ஏ சினிமாஸ், மதுரை உரிமையை ப்ரவீன் மற்றும் சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இவர்கள் கொடுத்திருக்கும் தொகை என்பது ஒவ்வொரு ஏரியாவுக்கும் விஜய்யின் முந்தைய படங்களின் தொகையைவிட அதிகம். விநியோக உரிமை, இசை உரிமை, உலகளாவிய வெளியீட்டு உரிமை என்று அனைத்தையும் சேர்த்தால் சுமார் 200 கோடியைத் தாண்டும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
‘சர்கார்’ ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,‘சர்கார்’ ஸ்பெஷல் வாட்ஸ் அப் ஸ்டிக்கரை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டிக்கர்கள் தற்போது ஐ போனில் மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
உலகம்
27 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
43 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago