விஜய் பேச்சு பற்றி கஸ்தூரி கருத்து

By செய்திப்பிரிவு

‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு ரிலீஸாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. இந்த விழாவில், ரைமிங், அரசியல் என விஜய்யின் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக, ‘உம்முனு... கம்முனு...’ என்ற ரைமிங், சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

“சர்கார் இசை வெளியீட்டு விழாவில், தளபதி விஜய்யின் அருமையான பேச்சைக் கேட்டேன். அசத்தல், செம பஞ்ச்கள். காந்தி பற்றியும், அரசியல் பற்றியும் அவர் பேசும்வரை, அவருக்காக இந்த உரையை யாரோ எழுதிக் கொடுத்திருப்பார்களோ என்று ஆச்சரியப்பட்டேன். பிரமாதம், வேகம்... இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள். விஜய் இப்படிப் பேசுவார் என சன் டிவி நிர்வாகமே நினைத்திருக்காது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்