‘சூர்யா 37’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்

By செய்திப்பிரிவு

சூர்யாவின் 37-வது படத்தில், பாலிவுட் நடிகர் சிரக் ஜானி இணைந்துள்ளார்.

சூர்யாவின் 37-வது படத்தை, கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘சூர்யா 37’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் நடைபெற இருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். மோகன்லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ், இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலக, அவருக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் சிராக் ஜானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் கே.வி.ஆனந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

1 min ago

இணைப்பிதழ்கள்

27 mins ago

தமிழகம்

37 mins ago

இணைப்பிதழ்கள்

54 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்