5 கதைகளை, 5 இயக்குநர்களை இயக்க வைத்து படமொன்றை உருவாக்க இயக்குநர் பா.இரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
‘காலா’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையில் தீவிரம் காட்டி வருகிறார் பா.இரஞ்சித். இதில் யார் நடிக்கவுள்ளார்கள் உள்ளிட்டவற்றை, கதை முடிவானவுடன் முடிவு செய்வார் எனத் தெரிகிறது.
இதனிடையே தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாகப் படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவையும் தயாரித்து வருகிறார் பா.இரஞ்சித். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் இதன் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 5 கதைகளை 5 இயக்குநர்களைக் கொண்டு இயக்கவைத்து, அதை ஒரு படமாக உருவாக்க இயக்குநர் பா.இரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார். இதில் ஒரு கதையை மட்டும் அவரே இயக்குவார் எனத் தெரிகிறது. இதர கதைகளை யார் இயக்கவுள்ளார்கள் உள்ளிட்ட தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார். மேலும், ‘குதிரை வால்’ என்ற பெயரையும் இப்படத்துக்காகப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
26 mins ago
தமிழகம்
54 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
1 hour ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago