‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் விருந்தினராகச் சென்றுள்ளார் கவிஞர் சினேகன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா ஆகிய மூவரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, ‘பிக் பாஸ் 2’ வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக, ‘கனா காணும் காலங்கள்’ என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளாக நடிக்க வேண்டும். அவர்களுக்கு ரித்விகா பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
அத்துடன், கவிஞரும் பாடலாசிரியருமான சினேகனும் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்று அவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அத்துடன், ‘எனக்கு ஒரே ஒரு வருத்தம். எனக்காக இந்த விஷயத்தை மட்டும் செய்யுங்கள். சரியோ, தவறோ... பிடிக்கிறதோ, இல்லையோ... சாப்பிடுகிற நேரத்தில் மட்டும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்’ என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை ‘பிக் பாஸ் 2’ வீட்டில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்பது போகப்போகத் தெரியும். கடந்த சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட சினேகன், போட்டியின் இறுதிவரை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளேயே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
21 mins ago
சுற்றுச்சூழல்
31 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
26 mins ago
விளையாட்டு
47 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago