சூர்யா, கார்த்தி இருவரும் ‘பார்ட்டி’ படத்துக்காக முதன்முதலாக சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கேங்ஸ்டர் காமெடிப் படமான இதன் ஷூட்டிங் முழுவதும் பிஜி தீவில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ச்சா ச்சா ச்சாரே’ என்ற பாடலை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் வருகிற திங்கட்கிழமை (ஜூலை 2) வெளியாக இருக்கிறது.
‘சன் ரைஸ்’ விளம்பரத்துக்காக முதன்முதலில் பாடினார். அதன்பிறகு ‘அஞ்சான்’படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ஏக் தோ தீன் சார்’ பாடலைப் பாடினார். கார்த்தியும் ‘பிரியாணி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில் ‘மிஸிஸ்ஸிபி’ பாடலைப் பாடினார். தொடர்ந்து, ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ படத்துக்காக ஜிப்ரான் இசையில் ‘குபு குபு குபு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால், இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்காகப் பாடியிருப்பது இதுதான் முதல்முறை.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
கருத்துப் பேழை
11 mins ago
சுற்றுலா
48 mins ago
சினிமா
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
வணிகம்
3 hours ago