நீட் தேர்வு எழுதும் 2 மாணவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்பதாக நடிகர் பிரசன்னா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இரண்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத உதவி செய்வதாக நடிகர் பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற இருக்கிறது. தமிழக மாணவர்கள் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக அமைந்துள்ளது.

இதற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில், இரண்டு மாணவர்கள் அங்கு சென்று வருவதற்கான செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

“இரண்டு ஏழை மாணவர்கள் அல்லது அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான போக்குவரத்துச் செலவை நான் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். தேர்வு எழுதும் இடம் மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை எனக்கு அனுப்பவும்” எனத் தெரிவித்துள்ளார் பிரசன்னா.

நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு, பிரசன்னாவைப் போல் பலரும் உதவ முன்வந்துள்ளனர்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் புகைப்படங்கள்

சென்னை எம்ஐடியில் நடிகர் அஜித்துக்கு புதிய பதவி

கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிப்பில் ‘நடிகையர் திலகம்’ படத்தின் புகைப்படங்கள்

பாலிவுட்டில் படம் இயக்குகிறார் விஷ்ணுவர்தன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்