‘காலா’ படத்துக்காக ஒரு பாடலில் ஒரு மில்லியன் குரல்கள்

By செய்திப்பிரிவு

‘காலா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்களை ரெக்கார்ட் செய்ய இருப்பதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக ஒரு மில்லியன் குரல்களை ரெக்கார்ட் செய்ய இருப்பதாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். “ஒரு மில்லியன் குரல்களை ஒரு பாடலுக்காக ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அதற்குப் பொருத்தமான வாய்ப்பு ‘காலா’ படத்தில் அமைந்துள்ளது. எல்லாத் தரப்பு மக்களின் குரல்களையும் ரெக்கார்ட் செய்வது எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த கவுரவம். நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம். கூடுதல் தகவல்களை விரைவில் அறிவிப்போம்” என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முரளி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். 156 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

58 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்