பார்த்திபன் மகள் - ஸ்ரீகர் பிரசாத் மகன் திருமணம்

By செய்திப்பிரிவு

பார்த்திபன் மகள் - ஸ்ரீகர் பிரசாத் மகன் திருமணம்

டிகரும், இயக்குநருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும் படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்சய்க்கும் திருமணம் வருகிற மார்ச் 8-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இருவீட்டார் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தத் திருமணத்தை நடிகர் பார்த்திபன் மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தவர், கீர்த்தனா. தொடர்ந்து இயக்குநர் மணிரத்னத்திடம் சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். தற்போது பார்த்திபன் இயக்கும் படங்களின் கதை ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்சய் இந்தியில் ‘பீட்சா’ படத்தை இயக்கியவர். தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

தனது மகள் திருமணம் குறித்து பார்த்திபன் கூறியதாவது, ‘‘கீர்த்தனா தற்போது என்னுடைய படங்களின் கதை விவாதம் மற்றும் எழுத்து வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பிள்ளைகள் திருமண வயதை எட்டியதும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் கீர்த்தனாவின் திருமணத்துக்கு இது சரியான நேரம் என்று முடிவு செய்தேன். நட்பு அடிப்படையில் ஸ்ரீகர் பிரசாத்தும், நானும் பேசி முடிவு செய்தோம். எங்கள் இரு குடும்பத்தினரும், நெருக்கமான உறவினர்களும், திரைக் கலைஞர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்