இலங்கையின் பிரபல பாப் இசை பாடகர் சிலோன் மனோகர் காலமானார்

By செய்திப்பிரிவு

இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் காலமானார். அவருக்கு வயது 73.

சென்னையில் நேற்று (22.01.2018) அவர் காலமானார். இலங்கையின் பாப் மாஸ்ட்ரோ என அவர் அழைக்கப்பட்டார். இலங்கையில் பாரம்பரிய இசையான 'பெய்லா' (Baila) எனப்படும் இசை வடிவத்தையும் பாப் இசை வடிவத்தையும் இணைத்து புதுவித இசை படைத்து பிரபலமானார்.

சுராங்கனி.. சுராங்கனி எனும் பாடலைப் பாடியதன் மூலம் அவர் இசை உலகில் பிரபலமானார். அந்தப் பாடலை அவர் இந்தி உட்பட 8 மொழிகளில் பின்னர் பாடினார். கொங்கனி மொழியில் பாடப்பட்டதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தித் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசனுடன் 'மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார்.

இரண்டாவதாக உள்ள யூடியூப் லிங்க் சுராங்கனி பாடலைத் தழுவி 'அவர் எனக்கே சொந்தம்' தமிழ்ப் படத்தில் மலேசியா வாசுதேவன் பாடியது.

 

 

 தமிழ் படத்தில் இடம்பெற்ற சுராங்கனி பாடல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

7 mins ago

ஜோதிடம்

19 mins ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்