துப்பாக்கி முனை அப்டேட்: நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி முனை' படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கி வரும் புதிய படத்திற்கு 'துப்பாக்கி முனை' என்று பெயரிடப்பட்டுள்ளது. வி.கிரியேஷன்ஸ் தாணு தயாரிக்கும் இப்படத்துக்குராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அன்பறிவ் சண்டைப் பயிற்சியை கவனித்துக் கொள்கின்றனர்.

துப்பாக்கி முனையில் கைதிகளைக் குறி வைத்து என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 33 பேரை கொலை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'துப்பாக்கி முனை' தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, நடித்து வருகிறார். ஹன்சிகா - விக்ரம் பிரபு இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்