சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 100-வது படத்தின் நாயகனாக நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' விரைவில் தங்களுடைய 100-வது படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இதற்காக கதைகள் கேட்கும் படலம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
'பூவே உனக்காக', 'லவ் டூடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' என சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களில் நாயகனாக நடித்த விஜய்யிடம், தங்களுடைய 100-வது தயாரிப்பில் நாயகனாக நடிக்க அணுகியிருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதனை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜீவா.
முன்னதாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 100-வது படத்திலும் நாயகனாக நடித்தவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
3 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
இந்தியா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago