'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார் அளித்திருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கிண்டலாக பதிவிட்டு இருக்கிறார்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'சொடக்கு மேல' பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில், 'சொடக்கு மேல' பாடலில் இடம்பெற்றுள்ள 'அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது' வரிகளுக்கு அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
இப்புகாரும் தங்களுடைய படத்தை விளம்பரப்படுத்தும் என்று சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.
இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பார்ந்த ஊடக நண்பரே (அதிமுகவை கிண்டலாக இப்படி அழைத்திருக்கிறார்) நன்றி. தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு விளம்பரம் செய்வதற்கென தனியாக பட்ஜெட் இருக்கிறது. ஆனால், வெளியே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். தயவு செய்து அதைத் தீர்க்க ஏதாவது செய்யுங்கள். இப்படி வழக்கு போடுவதற்குப் பதில் உங்கள் கட்சிக்காரர்களை போக்குவரத்து வசதியில்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு லிஃப்ட் தரச் சொல்லுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, செந்தில், கீர்த்தி சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கிறது 'தானா சேர்ந்த கூட்டம்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
உலகம்
11 hours ago