அஞ்சான் பாடகராக அறிமுகமாகும் சூர்யா

By ஸ்கிரீனன்

'அஞ்சான்' படத்திற்காக பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் நடிகர் சூர்யா. வெள்ளித்திரையில் சூர்யா பாடும் முதல் பாடலாக இது அமையவிருக்கிறது.

சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'அஞ்சான்'. லிங்குசாமி தயாரித்து, இயக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 17ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 5ம் தேதி 'அஞ்சான்' படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், 'அஞ்சான்' படத்திற்காக யுவன் இசையில், சூர்யா ஒரு பாடலை பாட இருக்கிறார். ஒரே ஒரு முறை விளம்பரத்திற்காக மட்டுமே பாடியுள்ள சூர்யா, வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடலாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர்கள் தங்களது படங்களில் வரும் பாடல்களை அவர்களே பாடிவரும் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார் சூர்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்