சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்: சேரன்

By செய்திப்பிரிவு

சிவாஜியின் அரசியல் குறித்த ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அவரின் அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை திறந்துவைத்தார். இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர். அதில் பேசிய ரஜினி சிவாஜி அரசியலில் வெற்றியடையாதது அவரின் தோல்வி அல்ல. மக்களின் தோல்விதான் அது என்றார்.

இந்நிலையில் ரஜினி பேச்சு குறித்து சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில், '' 'சிவாஜி அரசியலில் வெற்றியடையாதது மக்களின் தோல்வியே தவிர சிவாஜியின் தோல்வி அல்ல' என்ற ரஜினியின் பேச்சு எவ்வளவு பெரிய உண்மை. அந்த ஆழ்ந்த சிந்தனைக்கு தலைவணங்குகிறேன். மக்கள் ஏன் இப்படி சொன்னார் என யோசிக்கவேண்டும். அந்த ஒரு வார்த்தையின் அர்த்தம் புரிந்தால்'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்