யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி நடித்த ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்டவர் பிரசாந்த் நீல். அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிரசாந்த் நீலின் பூர்வீகம், ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள நீலகண்டபுரம் ஆகும். அவ்வப்போது தனது சொந்த கிராமத்துக்கு பிரசாந்த் நீல் செல்வது வழக்கம்.
இந்நிலையில், தனது தந்தையின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சொந்த ஊர் சென்ற அவர், அங்கு எல்வி.பிரசாத் கண் மருத்துவமனை கட்ட ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதை அம்மாநில முன்னாள் அமைச்சர் டாக்டர் என்.ரகுவீரரெட்டி தெரிவித்துள்ளார். இது தனக்கும் தன் கிராமத்துக்கும் பெருமையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இவருடைய சொந்த தம்பி சுபாஷின் மகன்தான் பிரசாந்த் நீல் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
கருத்துப் பேழை
23 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
7 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago