’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபகத் பாசில்,சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகிறது. ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், ‘புஷ்பா -2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’புஷ்பா’ முதல் பாகத்தில் வனத்துறை அதிகாரியாக விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக, அவர் விலகியதால், அதில் ஃபகத் பாசில் நடித்தார். இப்போது வேறொரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
உலகம்
56 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago