பிரமாண்டம், ஹீரோயிசம் நோக்கி நகரும் 'பான் இந்தியா' கலாசாரம் - ஓரு பார்வை

By கலிலுல்லா

இது 'பான் இந்தியா' சினிமா ஆதிக்கம் செலுத்தும் காலம் என எந்த தயக்கமுமின்றி கூறலாம். அண்மையில் வந்த படங்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளன. 'பாக்ஸ் ஆஃபிஸ்' ரெக்கார்டுகளை ஒன்றைவிட ஒன்று முறியடித்து சாதனை படைத்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், மொழியில் உருவாக்கப்படும் படைப்பு, பரவலாக்கப்பட்டு, மற்ற மாநில பார்வையாளர்களையும் சென்றடைவது என்ற அளவில் 'பான் இந்தியா' முயற்சி வரவேற்கத்தக்கது. என்றாலும் கூட, 'பான் இந்தியா' படங்கள் 'பிரமாண்டம்' ' ஹீரோயிசம்' என்ற கூட்டுக்குள் சிக்கி, நல்ல கதைகளை காவு வாங்குகிறதோ என்ற பார்வையையும் திரை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். அண்மையில் வெளியான, 'புஷ்பா தி ரைஸ்' 'ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப் சாப்டர் 2' படங்களின் வரவேற்பும், அதனால் மாறும் திரையுலகின் போக்கும் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

கரோனா தொற்று தொடங்கிய பிறகு திரைத்துறை பல்வேறு மாற்றங்களை கண்டிருக்கிறது. குறிப்பாக 'லாக்டவுன்' காலம் பல்வேறு புதிய மாற்றங்களை விதைத்திருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், ஓடிடியின் வளர்ச்சி என்பதே இங்கிருந்துதான் தொடங்குகிறது. வீட்டில் அடைப்பட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு வறட்சி ஏற்பட, அவர்கள் நாடியது ஓடிடியைத்தான். 'மணி ஹெய்ஸ்ட்' பிரபலமடைந்ததும், இன்றைய 'கேஜிஎஃப்' உலகப் புகழடைந்ததும் எல்லாமே லாக்டவுன் மகிமைகள். அப்படிப் பார்க்கும்போது, கரோனா தொற்று தொடங்கிய பிறகு வெளியான 3 படங்கள் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆஃபிஸையும் அசைத்து பார்த்துள்ளன. அந்த மூன்று படங்களும் தென்னிந்தியாவிலிருந்து உருவானவை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்