அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உருவாகி வருகிறது. இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாகப் படக்குழு வெளியிட்டு வருகிறது.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஒரு பெரும் தொகைக்கு லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை ‘புஷ்பா’ படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் படக்குழு தெரிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் ‘புஷ்பா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
15 mins ago
சினிமா
31 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
43 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
41 mins ago
சினிமா
59 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago