‘புலிமுருகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது மோகன்லால் - வைஷாக் கூட்டணி
வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'புலிமுருகன்' திரைப்படம் வெளியானது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் மலையாளத்தில் அதிக வசூலான படம் என்ற சாதனையை படைத்தது. தமிழிலும் டப் செய்யப்பட்டு இதே பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ‘புலிமுருகன்’ படக்குழு மீண்டும் ஒரு படத்துள்ளது இணைந்துள்ளது. வைஷாக் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் இப்படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு உதய்கிருஷ்ணா கதை எழுதியுள்ளார்.
இன்று (நவ. 10) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago