ஷங்கர் - ராம் சரண் இணையும் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'இந்தியன் 2' படம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார் ஷங்கர். தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டுப் பணிகளைக் கவனித்து வருகிறார்.
தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக ராம் சரண் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 'இந்தியன் 2', 'அந்நியன்' ரீமேக் ஆகிய பணிகளில் மும்முரமாக இருந்ததால், இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜிடமிருந்து ஷங்கர் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
'இந்தியன் 2', 'ராம்சரண் படம்' ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்தையும் இயக்கவுள்ளார் ஷங்கர். இது தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அந்நியன்' படத்தின் ரீமேக் ஆகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
8 mins ago
சுற்றுச்சூழல்
36 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago