'சலார்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'கே.ஜி.எஃப்' படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'சலார்'. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது. பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 'சலார்' வெளியாகவுள்ளது. இதனால் பிரபாஸுடன் நடிக்க பல்வேறு மொழி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இன்று (ஜனவரி 28) ஸ்ருதி ஹாசன் பிறந்த நாளாகும். ஆகையால் இந்த அறிவிப்பை வெளியிட்டு, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது 'சலார்' படக்குழு.
'கே.ஜி.எஃப் 2' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டு, 'சலார்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் நீல்.
'கே.ஜி.எஃப்' படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களே, 'சலார்' படத்திலும் பணிபுரியவுள்ளனர். இந்த ஆண்டுக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago