நவம்பர் முதல் வாரத்தில் 'புஷ்பா' படப்பிடிப்பைத் தொடங்குவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஒப்பந்தமானார். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கரோனா அச்சுறுத்தலால் 'புஷ்பா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. இதனால் 'புஷ்பா' படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குப் படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் 'புஷ்பா' தயாராகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
வணிகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago