நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் 'வரனே ஆவஷ்யமுண்ட்' என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவனின் மகன் சர்வஜித் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மலையாள சினிமாவில் பெரும் மதிப்பிற்குரிய பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடு. எண்ணற்ற விருதுகளைப் பெற்ற இயக்குநர் இவர். இவரது மகன் சத்யன் அனூப், 'வரனே ஆவஷ்யமுண்ட்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
துல்கர் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர்கள் சுரேஷ் கோபியும், ஷோபனாவும் நடிப்பது பெரிதாகப் பேசப்பட்டது. இதுவே படத்துக்கான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
ஷோபின் சாஹிர், ஊர்வசி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தில் தேசிய அளவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனின் மகன் சர்வஜித் நடிக்கிறார்.
சர்வஜித்தின் புகைப்படங்கள் மற்றும் சில வீடியோக்களைப் பகிர்ந்துள்ள சத்யன் அனூப், சர்வஜித்தைப் பார்ப்பதே தனக்கு அழுத்தத்தைப் போக்குவதாக இருப்பதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
32 mins ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
க்ரைம்
9 hours ago
இந்தியா
9 hours ago