‘கேஜிஎஃப்’ பார்ட் 2: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம், பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் ‘கேஜிஎஃப்’. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியானது. கடந்த வருடம் (2018) டிசம்பர் 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியிடப்பட்டது.

யஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், வசிஷ்டா என்.சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்தனர். வரலாற்று ஆக்‌ஷன் படமாக இது வெளியாகி, பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸிலும் வசூலைக் குவித்தது.

இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் (பகுதி 2), பூஜையுடன் இன்று (மார்ச் 13) தொடங்கியது. பெங்களூரு விஜய நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பட பூஜை நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மாஸான சீன்களின் தொகுப்பாத்தான் இந்தப் படம் வெளியானது. கன்னட சினிமாவில் இப்படியொரு படமா என்று வியக்கத்தக்க வகையில் இந்தப் படம் அமைந்ததுதான், எல்லோரும் இந்தப் படத்தைக் கொண்டாட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்