உலக அளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்த ஷாருக்கானின் 'பதான்’

By செய்திப்பிரிவு

ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘பதான்’ திரைப்படம் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்று வரும் ‘பதான்’ முதல் நாள் உலகம் முழுக்க முதல் நாள் ரூ.106 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.55 கோடியை வசூலித்திருந்தது.

இரண்டாம் நாள் படம் இந்தியாவில் ரூ.70 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம் முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் ரூ.125 கோடியை வசூலித்து பாலிவுட்டிற்கு அமோக தொடக்கத்தை கொடுத்தது ‘பதான்’. அதேநேரத்தில், உலக அளவில் படம் இரண்டு நாட்களில் ரூ.230 கோடியை வசூலித்து இரண்டு நாட்களில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது.

இந்நிலையில், தற்போது படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.300 கோடி வசூலைக் குவித்து ‘பதான்’ சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டில் அதிவேகமாக ரூ.300 கோடியை எட்டிய படம் என்ற பெருமையையும் ‘பதான்’ பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்